07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 22, 2007

தமிழ்ப்பதிவுகள்

2003 ஜனவரி முதல் நாள் கார்த்திக்ராமாஸ் ஆரம்பித்த தமிழ் வலைப்பதிவுலகம் இன்று சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த பதிவர்களில் தமிழர்களான சிலர் தமிழிலும் வலைப்பதியலாம் என்று உணர்ந்ததும் ஆங்காங்கே தமிழிலும் எழுதத்தொடங்கினர்.

அப்படி எழுத வந்தவர்களில் ஒருவரான மதிகந்தசாமி தமிழில் எழுதப்படும் பதிவுகளை தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் ஆக ஒரு வலைப்பதிவிலேயே தொகுக்க ஆரம்பித்தார்.

பின்னர் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பதிவுகளை தானாகவே தொகுக்கும் திரட்டி ஒன்றை உருவாக்கி தமிழின் முதல் வலைப்பதிவு திரட்டியான தமிழ்மணத்தை உருவாக்கினார் இன்னொரு வலைப்பதிவரான காசி ஆறுமுகம்.

பிறகு வலைப்பதிவுகளின் பெருக்கமும் தமிழ்மணத்தில் இடம்பெறாத வலைப்பதிவுகளும் மற்றொரு வலைப்பதிவரான சாகரனுக்கு தேன்கூடு என்னும் மற்றொரு வலைதிரட்டியை உருவாக்க உந்துதலாக அமைந்தது.

பல தமிழ் வலைப்பதிவு எழுதுகருவி நிரல்களை உருவாக்கிய சுரதா யாழ்வாணனும் வலைப்பதிவுக் குடில் ஒன்றை உருவாக்கிய போதிலும் அவர் அதைத் தொடரவில்லை.

பின்னர் எகலப்பை தந்த தமிழா முகுந்த் தமிழ்ப்பதிவுகள் திரட்டியை உருவாக்கினார். இன்றைக்கு இம்மூன்று திரட்டிகளும் மட்டுமன்றி டெக்னோரட்டி, டெலிசியஸ் போன்ற வலைத்தொகுப்பான்கள் மூலமாகவும் தமிழ் வலைப்பதிவுகள் திரட்டப் பட்டு ஏராளமான வாசகர்களால் வாசிக்கப் படுகிறது.

சிறிய குறிப்புகள் மற்றும் அனுபவங்கள் மட்டும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவுகள் இன்று மிப்பெரிய மாற்றூடகமாக மாறிவிட்டன. எழுத்து, குரல், படம், ஒலி-ஒளி என எல்லா பல்லூடகத் தன்மைகளும் இன்று வலைப்பதிவுகளில் சாத்தியமாகியுள்ளன.

எல்லா நன்மைகளிலும் தீமை கலந்தே இருப்பது போல வலைப்பதிவுகளிலும் சாதி, சமயச் சண்டைகளும் குழுச்சண்டைகளும் பெருகியுள்ளன. எனவே பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம் போல நல்ல பதிவுகளை அடையாளம் கண்டு வாசிப்பது இன்றைய வலைப்பதிவுப் பெருக்க சூழலில் தேவையாக உள்ளது. அதற்கான முயற்சிகள் பலவும் நடந்தே வருகின்றன. அவை பற்றி...

(தொடரும்)

5 comments:

  1. புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் நீங்கள் தொகுத்துள்ளவைகள்.

    பதிவுலகில் நமக்காக உழைத்த/இன்னும் உழைத்துக்கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. //சிறிய குறிப்புகள் மற்றும் அனுபவங்கள் மட்டும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவுகள் இன்று மிப்பெரிய மாற்றூடகமாக மாறிவிட்டன. எழுத்து, குரல், படம், ஒலி-ஒளி என எல்லா பல்லூடகத் தன்மைகளும் இன்று வலைப்பதிவுகளில் சாத்தியமாகியுள்ளன.//

    உண்மைதான்.

    //எல்லா நன்மைகளிலும் தீமை கலந்தே இருப்பது போல வலைப்பதிவுகளிலும் சாதி, சமயச் சண்டைகளும் குழுச்சண்டைகளும் பெருகியுள்ளன. எனவே பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம் போல நல்ல பதிவுகளை அடையாளம் கண்டு வாசிப்பது இன்றைய வலைப்பதிவுப் பெருக்க சூழலில் தேவையாக உள்ளது.//

    மிகச் சரி.

    //அதற்கான முயற்சிகள் பலவும் நடந்தே வருகின்றன.//

    அவற்றை அறிய ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  3. வலைச்சரத்துக்கும்,
    குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

    ReplyDelete
  4. //எல்லா நன்மைகளிலும் தீமை கலந்தே இருப்பது போல வலைப்பதிவுகளிலும் சாதி, சமயச் சண்டைகளும் குழுச்சண்டைகளும் பெருகியுள்ளன. எனவே பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம் போல நல்ல பதிவுகளை அடையாளம் கண்டு வாசிப்பது இன்றைய வலைப்பதிவுப் பெருக்க சூழலில் தேவையாக உள்ளது.//

    ஆஹா, வெகு அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள்.

    படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. அன்பின் வை.கோ - வலைச்சரத்தின் ஆரம்ப காலப் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தற்கு நன்றி. தொடர்ந்து படிக்க அன்புடன் அழைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது