07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 3, 2007

எங்கிருந்து எங்கு....?

சென்ற வாரத்தில், இணைய நண்பர் ஒருவருடன் சிறுபராய நினைவுகள் குறித்து உரையாடும்போது சொன்னார், சின்னவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் தன்னையும் சேர்த்துவிடுவார்களாம், தானும் போட்டியன்று அதற்கான உடையெல்லாம் அணிந்து, ஊட்டசக்திபெறவெனத் தரப்படும், குளுக்கோஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, சத்தம் போடாமல் வேலிக்கால் புகுந்து, அருகேயுள்ள தன்வீட்டிற்குச் சென்று விடுவாராம். போட்டிநேரத்துக்கு போட்டியாளர்களை அழைத்தால், தன்னைக் காணக்கிடையாதென்று. கிட்டதட்ட அதுபோல்தான் வலைச்சரம் தொகுப்பாசிரியராக என் பதவிப்பொறுப்பும் இவ்வாரத்தில் ஆகிவிட்டது. பெரிய தடாலடியாக எழுத்தைப்பற்றியெல்லாம் எடுத்துவிட்டு, அதற்கு நாலுபேர் வந்து(உண்மையிலேயே நாலு பேர்தானுங்க:)) ஊட்டமெல்லாம் தந்து, உசுப்பேத்திவிட, இரண்டு பதிவு போட்டுவிட்டு, இருந்த இடமே தெரியாமல் ஒடிவிட்டேன்.
மன்னிக்க வேண்டும் நண்பர்களே! சிந்தாநதி நீங்களும்தான். இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. ஞாயிறு பகல் தமிழ்மணத்தின் வழங்குநிலைக் குழப்பமும், திங்கள் என் உடல்நிலைக்குழப்பமும், ஒன்றாகத் தாக்கியதால், ஆட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டி வந்திற்று. ஆனாலும் திரும்பவும் வந்தாயிற்று. நாளை பதவியிலிருந்து கலைப்பதற்குள் முடிந்தவரை, இடைவெளியை நிரவி, ஆட்டக்கணக்கிற்கு வந்துவிடுவேன் என்று நம்புகின்றேன். பார்க்கலாம்...:)) சரி மீள ஆரம்பிப்பதை ஒரு பம்பலா(அதுதாங்க கலக்கலா) ஆரம்பிப்போமே...

நேற்று ஒரு பதிவில், ஒரு அசைபடப்பாடல் கேட்டேன், அதைக் கேட்டபோது அதே போன்ற ஒரு தமிழ் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது. என் ஞாபகத்துக்கு வந்த இந்தப்பாடல் காதலிக்கநேரமில்லை படத்தில், மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்தது. வெளிவந்த வருடம் 1964. இங்கிருந்த அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா?. எங்கிருந்து எங்கு சென்றதென எனக்குப்புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா எனப்பார்ப்போம். அதற்கு நீங்கள் இங்கிருந்து
அங்கு செல்ல
வேண்டும். சென்று பாரத்தபின் எங்கிருந்து எங்கு சென்றதெனவோ, அல்லது அங்கிருந்து, இங்கிருந்து, எங்கிருந்தும் எதுவும் செல்லவில்லை. அதது அங்கங்கேயிருக்கிறது என்கிறீர்களா?... எதுவாயினும் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது