07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 8, 2007

இந்த வாரம் ‍ - கென் -

வணக்கம்,

இந்த வாரம் வலைப்பதிவுக்காய் கடந்த மாதமே பொன்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். பணிச்சுமை என்னை இட்லிக்குக்கராய் அவிப்பதால் ( சூரியப்பனி எல்லாம் வேற ஆளுங்க உபயோகிப்பதால்) இப்போது வலைப்பதிய நேரம் கிடைத்திருப்பதால் இனி என் பார்வையில் படித்தது பிடித்தது என்று ஒரு வாரம் நானும் பதிய வருகிறேன்.
என் இடுகைக்கான சில சுட்டிகளை த‌ருவ‌தை விட‌ நீங்க‌ளே ப‌டித்து பார்த்து உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைத்தாருங்க‌ள்.

இனி நான் ரசித்த சில வலைப்பதிவுகள் பற்றி:

மற்றபடி அறிமுக இடுகை போதும் இனி எனக்கு தெரிந்த சில வலைப்பதிவுகள் பற்றி
குறிப்பிடத்தகுந்த சில எழுத்தாளர்கள் எழுதி காணக்கிடைக்காத கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய வலைப்பூக்கள் பற்றி இன்று பதிக்கிறேன்.

புள்ளி :

எழுதி வரும் ரகு, சித்திரன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதுகிறார். இவரது கதைகள் "மனதில் உந்தன் ஆதிக்கம்" என்ற பெயரில் சிறுகதை தொகுப்பாய் வெளிவந்திருக்கிறன. சின்ன சின்ன சம்பவங்களும் சம்பாஷணைகளுமாக கதைகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
சிறுகதைகள் மட்டும் இல்லாமல் திரைப்பட விமர்சனங்களும் நிகழ்வுகளும் மிக எளிமையாகவும் நகைசுவையுடனும் பதித்திருக்கிறார்.
மரத்தடி.காமி லும் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார்.

************************************************************
நாதாரி :


நாதாரி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெயர் என்றும் அதை நாம் திட்டுவதற்காக கட்டமைத்துக்கொண்டோம் என்றும் மிக அழுத்தமாக கூறி, நாதாரி என்ற பெயரிலேயே பதிக்கிறார் இந்த நண்பர். இவரது சமூக பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் பழகிய அனுபவங்களும் கூரிய வார்த்தைகளாக வந்து விழுகின்றன.

கவிதைகளும் கட்டுரைகளும் நிறைந்திருக்கும் இவர் வலைப்பூவில் நாம் பார்க்க தவறுகிற அல்லது மறுக்கிற நுணுக்கமான நிகழ்வுகளின் ஆழங்கள் தெரிகின்றன.

இவரது கவிதை ஒன்று :

மீன் அரித்து
மிச்சமிருந்த
நிலவின் மேல்
பொத்தென்று குதித்து
தின்றது
தவளை

***************************************************************
உயிர்மை :

உயிர்மை எல்லோருக்கும் பரிச்சயமான தரமான சிறுபத்திரிக்கை. துவங்கிய நான்காண்டுகாளில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இந்த பத்திரிக்கையின் வலைப்பூ இது. மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்துவமான நடையிலேயே கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன. அவரது கவிதைகளில் சிலவும், அவர் ரசித்த கவிதைகளும் இங்கே படிக்க கிடைக்கும். அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த ஒன்று :

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

இல‌க்கிய‌த்துறையில் ஆற்றிய‌ ப‌ணிக்காக‌ "க‌ரிச‌ல் விருதும் " த‌ம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்ப‌த‌ற்காக‌வும் வாழ்த்துங்க‌ள் உயிர்மை ம‌னுஸ்ய‌ப்புத்திர‌னை

****************************************************************
ஸ்ரீபதி பத்மநாபா :

தமிழிலும் மலையாள‌த்திலும் எழுதி வரும் எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா அவர்களும் இப்போது வலைப்பூ துவங்கி இருக்கிறார். திரைப்பட விமர்சனங்களும் கவிதைகளுமாய் சுவையோடு எழுதும் ஸ்ரீபதியின் கவிதைகளில் ஒன்று :

ஆறுதல் பரிசு

எறும்பு தின்னிகள் மிகவும் சாதுவானவை.
ரொம்ப நல்லவை.

பசிக்கிற நேரம்
கொஞ்சம் எறும்புகளை மட்டும் விழுங்கி
அவை பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கும்.

எப்பொழுதாவது முட்டையும்
கொஞ்சம் பாலும்
கிடைத்தால் மிக உசிதம்.

முகத்தின் அருகே மெதுவாய் நகரும்
நிலமே உலகம்.
அவ்வப்போது மூக்கில் கொஞ்சம் மண்
ஒட்டிக்கொள்ளும்.

அதனாலென்ன, பரவாயில்லை.
பதிக்கிற சிறு காற்சுவடுகளை
திரும்பிப் பார்ப்பது இல்லை.
அடுத்து வைக்கப் போகும் சுவட்டை
எண்ணிப் பார்ப்பதும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்றவளே,
என்னைப் போலவே ஒரு எறும்பு தின்னியைப்
பரிசாய்த் தருகிறேன்.
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.


ந‌ன்றி : திரு.ரகு, திரு.ம‌னுஸ்ய‌ப்புத்திர‌ன், திரு.நாதாரி,திரு. ஸ்ரீபதி பத்மநாபா ம‌ற்றும்

வாசிக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும்...

2 comments:

  1. பத்மநாபா பதிவை படித்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது