07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 29, 2007

சிந்தனை செய் மனமே!

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த தானத்தை விட பல படிகள் உயர்ந்தது உறுப்புகள் மற்றும் ரத்த தானம். ரத்த தானம் & கண் தானத்தை தவிர்த்து வேறு உறுப்பு தானத்தை நாம் சிந்தித்து உள்ளோமா? சிந்திக்க

இராமநாதனின் - ஆதலால் தானம் செய்வோம்

சாதிகளை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே நமக்கும் நம் பிள்ளைகளும் இன்னும் சாதி சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், கிடைக்கும் ஒதுக்கீடுகளை அனுபவித்துக் கொள்ளவும் சில முயல்கிறார்கள்(அவர்களுக்கு அது தேவைப்படாத போதும்). எங்கிருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்க போகிறோம் என்று சிந்திக்க

முகமூடி யின் - சமூகநிதி

நாடு எனக்கு என்ன செய்தது, நான் ஏன் நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு சில சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம். அதைக் குறித்த சிந்தனை

செல்வனின் - நான் என்ன செய்தேன் நாட்டுக்கு

நம் இந்தியாவில் ஏதுவுமே மாறவில்லை. பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான், ஏழை ஏழைகளாகவே இருக்கான். வாய்ப்புகள் அனுபவித்தவனுக்கே மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கிறது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்ற அவலநிலை இன்றும் உள்ளது. இதை மாற்ற இளைஞர்களின் பங்கு என்ன? இந்த இடைவேளியை குறைக்க அவர்களின் பங்கை குறித்து சிந்திக்க

குமரனின் - இரண்டு வித இந்தியா

பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சட்டத்தை மீறினால் எவ்வளவு கூப்பாடு போடுகிறோம், ஆனால் நம் அருகிலே சட்டத்துக்கு புறமாக ஏரிகள், நிலங்களை அபகரிப்பவர்களை, விதிமுறைக்கு மீறி பல அடுக்கு மாடிகளை கட்டுவர்களை கண்டு நான் என்றாவது சிந்தித்தது உண்டா?

பத்ரி யின் - சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

செய்த தவறுக்கு தண்டனையாகவோ, செய்தா தவறுக்கு தண்டனையாகவோ நாட்களை எண்ணிக் கொண்டே வாழ்ந்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதே செய்து வந்த நாம் அவர்களையும் இருக்கும் வரை ஒரு மனிதராக மதிக்க சிந்தித்து உள்ளோமா?

மங்கையின் - Stop Aids, Keep the promise

மேல் சொன்னது எல்லாம் சிந்தித்து நம் சமூகத்தை சீர்படுத்து. நம்மை நாமே சீர்படுத்து

நாகை சிவா - சிந்தனைத் துளிகள்

4 comments:

  1. இதை தான் நான் எதிர்பார்த்தேன்...;))

    ReplyDelete
  2. வேதா!

    நீங்க சொன்னா சரி தான் இருக்கும். நன்றி

    ReplyDelete
  3. எல்லாம் ரகசியமா வச்சுக்கிட்டா என்னை மாதிரி மரமண்டைங்க எப்படி வந்து படிக்க முடியும்?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது