07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 17, 2008

சொல்லை செயலாக்கியவர்கள்!

தமிழ்மண முகப்பில் எதிர்மறையான செய்திகளையே பார்த்து சலித்தவர்களுக்கு செயலில் இறங்கி சாதனைகள் புரிந்துவரும் சக பதிவர்களை இங்கே பதிகிறேன்.

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்தியதோடல்லாமல் அவர்களது பலவேறு துயரங்களின்/வலிகளின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தவர் லிவிங்ஸ்மைல் வித்யா. இவரது பதிவுகள் உண்மை உறைந்திருப்பதால் சூடானவை.

மங்கை: நலவாழ்வில் எய்ட்ஸ் நோயினால் துன்புறுவதே கொடுமையானது.அதிலும் கள்ளம்கபடில்லா பெண்கள் கல்யாண பந்தத்தால் அக்கொடுமைக்கு உள்ளாவது எத்தனை கொடியது... அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழும்வகைக்கு துணைசெல்லும் மங்கையின்் சேவை மானுடம் போற்றுதற்குரியது. அவரது பதிவில் மீனாட்சி என்ற பாதிப்புக்குள்ளானவரின் இந்த இடுகை நிச்சயம் படிக்கவேண்டியவைகளில் ஒன்று.

சாலைகளின் குறுக்கே கட்டப்படும் கோவில்களா ? தொடர்வண்டிகளில் மனிதக்கழிவுகளை சூழலை பாதிக்காது வெளியேற்ற வழிவகை காணவேண்டுமா?காவல்துறைகளின் குறைகளை உரிய இடத்தில் சேர்த்துக்களைய வேண்டுமா ? நமது தருமி இருக்கிறார். இவரது இடஒதுக்கீட்டிற்கான பதிவுகள் அரசியல்சத்தங்களுக்கு அப்பால் தெளிவாக கேட்பவை. அவற்றை நிறைவேற்றுவதில் UPSC செய்யும் தில்லுமுல்லுகளை காட்சிப்படுத்தியவர்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் எனக் கூறியதால் கோவில்களின் மாநிலமாயுள்ளது தமிழ்நாடு. ஆனால் மக்கள் பெருந்திரளெனக் கூடும் சில கோவில்களைவிட்டால் பெரும்பாலானவை கவனிப்பாரின்றி சிதிலமடைந்து வருகின்றன. இந்நிலை மாற திருநாவுக்கரசரின் உழவாரப்பணி போல ஆலயம்தோறும் திருப்பணி செய்துவரும் மரபூர் சந்திரசேகரன் பழமையைப் பாதுகாக்கும் உன்னதப் பணியை செய்துவருகிறார்.

குழந்தைகளின் கல்விக்காகவும் ஊரக கல்வி மேம்பாட்டிற்காகவும் தனது நேரத்தை செலவிட்டு நமது கவனத்தைக் கவர்ந்த இம்சையின் இந்தப்பதிவு எவரது மனதையும் கரைக்கும். இவர் பங்காற்றும் Friends of Children அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக வேண்டும்.

தமிழகத்தின் மோசமான இயற்கைச்சீற்றமான சுனாமி பாதிப்பின்போது தமிழ் வலைப்பதிவினரின் தரப்பில் ரஜினி ராம்கியும், பத்ரியும் தீவிரமாய் மீட்புபணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரோசாவசந்த் அவர்கள் சுனாமி நிவாரணத்திற்கு பதிவர்களின் முயற்சிகளை இந்தத் தளம் அமைத்து ஒருங்கிணைத்தார்.

வறியவர்களின் கல்விக்காகவும் மருத்துவசெலவுகளுக்காகவும் பதிவர்கள் என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல்ரவி ஆகியோர் ஒருங்கிணைத்து உதவியதும் பதிவர்களின் சமூக அக்கறையை காட்டுவதாக அமைந்தது. தற்சமயம் பாலா அன்புக்குரிய அந்தோணிமுத்து அவர்களுக்கு உதவிட பதிவிட்டதும்அதன் தொடர்ச்சியாக பலநல்ல உள்ளங்களின் பொருளுதவியை ்வேஅடுத்தகட்ட வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனைக் கொண்டு சக்கரநாற்காலி கொடுத்திட பண உதவி கேட்டுள்ளார்.
நற்பணிக்கு நாமும் நம் பங்காற்றிடுவோம்.

எனது நினைவில் நின்றவர்களைச் சொல்லி விட்டேன்...இனி பின்னூட்டங்களில் உங்கள் நினைவிற்கு வந்தவர்களைக் குறிப்பிடுங்களேன் !

5 comments:

  1. அடுத்தவர்களின் துன்பங்களைக் கண்டு வார்த்தைகளால் அல்லாமல் செயலால் உதவி செய்பவர்கள் கண்டிப்பாக அடையாளம் காட்டப்பட வேண்டியவர்கள். :)

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  3. நன்றி !

    And Thanks for spreading the MESSAGE !

    ReplyDelete
  4. தமிழ்பிரியன்..நன்றி
    இம்சை, பாலா...நன்றி சொல்லவேண்டியவர்கள் நாங்கள் :)

    ReplyDelete
  5. //FOCPUNE//

    நன்றி

    இம்சை
    கொலை வெறிப்படை
    மங்களூர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது