07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 13, 2008

கலக்கல் கடிதங்கள்!



தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ விதவிதமான கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன! எல்லாமே ஒவ்வொரு விதமான சுவையோடு,சுவரஸ்யமாகவும் இருக்கும் கடிதங்கள்தான்!

தமிழ் பதிவுலகில் சிலர் எழுதிய நகைச்சுவை கடிதங்களை மட்டும் கொஞ்சம் படிப்போம் வாங்க!

۞۞۞۞۞

அயல்நாட்டு தம்பிக்கு அண்ணன் வரைந்த கடிதம்

பொறுத்தது போதும்!
ஃபிகரைத் தேடு!
கடலை போடு!
மாலையில் கூடு!
விடியும் வரை ஆடு!!
இளமை கொண்டாடு!!

۞۞۞۞۞

ஊதிய உயர்வு கடிதம் எழுதி தரச்சொல்லி கேட்டு வந்த நண்பனுக்கு ஆப்பு கடிதம் எழுதி அனுப்பிய அன்பு நண்பர் அதை அவரின் பதிவில் சொன்ன சுவாரஸ்யம்

உயர"மான இடத்தில் அமர்ந்திருக்கும் டவர் கிரேன் ஆப்பரேட்டரை கூட நிர்வாகத்தின் தொலை பேசி வழி கூப்பிடாமல் விசில் "ஊதி"யே கூப்பிட்டு வேலை வாங்கும் எனக்கு நீங்கள் ஏன் "ஊதி"ய உயர்வு தரக்கூடாது? இதை சிந்தித்து சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

۞۞۞۞۞

கல்லூரியில் படிக்கும் மாணவன் அதுவும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அடிக்கும் ரவுசுகளுக்கு அளவே கிடையாது என்பது உண்மைதான்!

அதுவும் வார்டனின் சிக்கி தவிக்கும் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஐடியாக்கக் தோன்றும் எப்படிடா அவரிடமிருந்து எஸ்கேப ஆகுறதுன்னு அப்படி எஸ்கேப் ஆனா மாணவனின் அப்பாலஜி லெட்டர் இது!

வார்டன் : என்னடா இது லெட்டரு?
நான்: அப்பாலஜி லெட்டர் சார்.
வார்டன்: என்ன எழுதிருக்குனு ஒரு தடவை படி.
நான்: (லெட்டரின் தமிழாக்கம்)

ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.
இப்படிக்கு,பாலாஜி

۞۞۞۞۞

ஆத்தங்கரை விநாயகருக்கு ஒருத்தரு எழுதியிருக்கர கடிதத்தை படிச்சுப்பாருங்களேன்!

ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது. நாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து :)))))) "ஸ்மைலியோ, "சூப்பர் கலக்குறீங்க"ன்னோ, "எதார்த்தமான நடை..நல்லாருக்கு"ன்னோ, "இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்"ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்...நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும்.!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்தே விடுக்கும் வேண்டுக்கோளாய்..!

கடிதம் எழுதறதே ரொம்ப சுவாரஸ்யமான விசயம்தான்! சாதரண லெட்டர்ல எழுதுற வழக்கம் விட்டுப்போய், இப்ப இமெயில் கூட எழுதறதுக்கு முடியாத மாதிரியான சூழ்நிலையில் இருக்கறவங்க, அட்லீஸ் பதிவுலயாவது அப்பப்ப லெட்டர் போடுங்களேன்!

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது