07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 13, 2008

பூனைகள்!


தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் ஆதரவு கொடுத்து எழுதப்பட்ட வீட்டுப்பிராணிகளில் பூனைக்குத்தான் அதிகம் மவுஸ் போல...!

பூனைகளுடனான அன்பு காட்டுதலை அனுபவித்து எழுதியது போன்றதொரு சிறுகதை பதிவில்

பெற்றவர்களை வயது வந்த பிள்ளைகள் விட்டுவிட்டு விலகிப்போகும், வயதான காலத்தில் பெரியவர்களை பெரும்பாலும் ஹோமுக்கு அனுப்பும், இருபத்து மூன்று வருஷ மணவாழ்க்கையை தடாலென்று அறுத்துவிட்டு புத்தம் புதுசாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வெட்கப்படும் அமெரிக்க சமூகத்தில், பிராணிகளை போற்றும் குணம் ஆச்சரியமளித்தது முதலில். ஆனால் இப்போதுதான், மற்ற இடங்களின் தாங்கள் எதிர்கொள்ளும் வெறுமையை ஈடுகட்ட இவர்கள் பிராணிகளை நாடுகிறார்களோ என்ற சம்சயம் வருகிறது

۞۞۞۞۞

தம்பியின் பூனை பற்றிய சோகங்கள்

ஒரு சாதாரண விஷயம் என் மனதை எப்படி பாதித்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதை ஒரு விபத்து என்று சொல்ல முடியாது, திட்டமிட்ட கொலை என்றும் சொல்ல முடியாது. விதி என்று கூட வைத்து கொள்ளலாம். எந்த ஒரு உயிரின் மீதும் அதிக நேசம் கொள்ளும்போது அதனை பிரிந்தால் ஏற்படும் வலி நெஞ்சை விட்டு விலகாது. அதை சொல்லுவதுதான் இந்த சம்பவம். மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றலாம் ஆனால் இது என்னை அறியச்செய்தது. நீ இத்தனை கேவலமானவனா இல்லை இத்தனை கோபக்காரனா என்பதை தெரியப்படுத்தியது. என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கும் தம்பி செய்த காரியம் கொஞ்சம் சரியில்லாததுதான் என்று தோன்றினாலும் முடிவில் மனதில் தோன்றும் சோகம் எவரையும் கை நீட்டி குற்றம் சொல்ல வைக்காது என்பது மட்டும் உண்மை!

۞۞۞۞۞

ஒரு சிறுகதை எழுதும் எழுத்தாளர் அதை பிறரிடத்தில் கொண்டுச்செல்லும்போது உண்டாகும் அனுபவ நிகழ்வுகள் கதை கற்பனையானாலும் கூட அதை கொண்டு சென்ற இடத்தில் ஏற்படும் எழுதியது!

பார்த்தால் மூலையில் கருப்பும் சாம்பல் நிறமும் சேர்ந்த நிறத்தில் மிக அழகாய் ஒரு பூனைக்குட்டி உடம்பை உதறியவாறு நின்றிருந்தது. அது எங்களைப் பார்த்து திரும்ப மியாவ் என்றது. உள்ளே வரலாமா என்று பட்டன் போன்ற கண்ணை உருட்டி பார்த்தது அனுமதிக்கேட்பதுப் போல இருந்தது.

அசட்டு பாசம் வெக்கவும் வேண்டாம். பின்னால அவஸ்தையும் படவேண்டாம்!. இத ரொம்ப தூரக் கொண்டுப் போய் விட்டுடு. பக்கத்துல விட்டா திரும்பி வந்துடும்.

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

அசட்டு பாசம் வெக்கவும் வேண்டாம். பின்னால அவஸ்தையும் படவேண்டாம்!.

2 comments:

  1. பூனை, நாய், கோழிக்குஞ்சு அப்படின்னு சிலது வெவ்வேறக் காலக்கட்டத்துல வளர்த்தோம். சில காலம் மீன் வளர்ப்பு. எதில அதிகம் சிரத்தை வைக்கிறோமோ அது நம்மிடம் இருந்து பறிக்கப்படும் போது அதிகம் வலிக்கிறது என்பது மட்டும் உண்மை

    ReplyDelete
  2. பூனைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் பதிவு?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது