07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 24, 2008

சிந்தாமல் சிதறும் சிந்தனைப் பூக்கள் சில.....

எழுத்துதல் என்பது வெறும் மன நிறைவை விடவும் உதவியுள்ளவையாகவும், சிந்தனையைத் தூண்டி விடுபவையாகவும் இருந்த்து விட்டால் எவ்வளவு மன நிறைவு?????அப்படிச் சிந்தனையைத் தூண்டி விடும் ஒரு சில பதிவுகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
வைரவன் கலையரசியின் இந்த வலைப்பூ....

"என்மதம்! என்இனம்!
என்மொழி! என்னாடு!"
எனும் மானுடர்களை "என்உலகம்!
என்உயிர்கள்!!" - எனச்சிந்திக்கப்
பழக்கவேண்டும். "
என்று சொல்லும் இவரின் மனம் என்னும் கவிதையின் சில வரிகள்....

"கட்டுப்படுத்தி
குப்பைகள் அகற்றி
குணங்கள் சேர்த்தால் கடவுள்!"

அப்புறம் கிருத்திகாவின் வடிகால்...
நிறைய யோசிக்க வைக்கிறது...
நம்ம ஏன் இப்பிடி யோசிக்கவில்லை என யோசிக்க வைக்கிறது..இவரின் இது ஒரு மழைக்காலம் என்னை ரசிக்க வைத்தது என்றாலும் மூகமூடிக் கவிதைகள் சிந்திக்க வைத்தது.அதிலும் இந்த வரிகள்...இயலாமையின் கொடுமையை அழகாகப் பதிகிறது...

"நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

பெண்களின் உரிமைகள் பற்றிய பதிவில்

"முண்டியடித்து முகம்சிவந்து
முந்திச்செல்வதில் சுகம் கண்டதை
புரட்சி எனச்சொல்லாதே
புரட்சி புத்தியில் வரவேண்டியது,"

என்னைக் கவர்ந்த வரிகள் இவை...

அப்புறம் பாரி அரசின் சிந்தனைப் பூக்கள்.....
எப்பொழுதாவது சொல்லலாம்,பயன்படும் என்று சேகரித்து வைத்த உண்மைகள் நிறைய இவர் பதிவில்....அருமையான சிந்தனைபூக்கள் பல....

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது