07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 29, 2012

சென்று வருக கோகுல் - அறிமுகங்களுடன் வருக வீடு சுரேஷ் குமார்

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் வணக்கம்

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர்கோகுல் - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்புடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்ம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எட்டு பதிவுகள் இட்டு, ஐம்பத்து மூன்று பதிவர்களை அறிமுக படுத்தி, அவர்களது அறுபத்தைந்து பதிவுகளையும் - தன்னுடைய் இருபத்தைந்து பதிவுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார். பெற்ற மறுமொழிகளோ நூறினைத் தாண்டி விட்டது.

நண்பர் கோகுலை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமிதம் அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்பிடன் இசைந்துள்ளார் “வீடு” சுரேஷ் குமார்.

இவர் ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த கொங்கர்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்தும், இவருக்கு ஓவியம் வரைதல், கதை, கவிதை போன்ற வற்றில் இருந்த ஆர்வம் - ஈடுபாடு - படிப்பில் இல்லை. சகோதரர்கள் பணம் கொழிக்கும் துறைகளில் பணி புரிந்தாலும், இவர் திருப்பூரில் பின்னலாடை அச்சுத் துறையில் - மனம் கவர்ந்த ஓவியத்துறையில் - ஒரு தனி இடத்தைப் பிடித்த பெருமையுடன் மனமகிழ்வுடன் பணி புரிகிறார்.

நண்பர் “வீடு” சுரேஷ் குமாரினை வருக ! வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கோகுல்

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்

நட்புடன் சீனா




4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. பொறுப்பேற்கவிருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கோகுல்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது