07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 22, 2012

மனம் கவர்ந்த பதிவுகள்



வணக்கம் நண்பர்களே! வலைச்சர புதனில் இன்று என்னைக்கவர்ந்த பதிவுகளின் வழியாக அறிமுகப்பதிவர்களுடன் உங்களை சந்திக்கவருகின்றேன்.எல்லா பதிவுகளை தினம் தினம் வாசித்து வந்தாலும் சிலரது பதிவுகளை வாசித்தவுடன் ஏதோ நமக்கே நடந்தது போன்ற ஓர் உணர்வு வருவது இயற்கையே.அத்தகைய பதிவுகளில் என்னை கவர்ந்த சில பதிவுகளை பூச்சரமாக தொடுத்து உங்களிடம் சமர்பிக்கின்றேன்.

முதலில் சென்னைமண்ணின் சூப்பர் ஸ்டார் சென்னை பித்தன் அவர்களின் அசத்தல் பதிவு. நான்தான் சமையல்காரி அலமேலு.வீட்டுவேலைக்கு செல்லும் தாய்மார்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகிறார்

இவர் நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். சகோதரி ஆமினா  வர்கள் எழுதியதில் பிடித்தது ஆணாதிக்கத்துக்கு காரணம் ஆண்களா? பெண்களா ஒரு பட்டிமன்றமே பதிவுல நடத்திக்காட்டியிருக்கார்.

 அடுத்து காணாமல் போன கனவுகள் வலையெழுதும் ராஜி அக்கா அவர்கள் தன் தந்தை குறித்து எழுதிய நெகிழ்வான பதிவு படித்ததும் ஒரு கணம் விக்கித்தது மனம்.குடும்ப உறவுகளில் தந்தை மகள் பாசத்தின் பிரதிபலிப்பாய் இப்பதிவுடன் உன்வீட்டு சுவற்றில் ஓர் புகைப்படமாய் கவிதையை வாசியுங்களேன்.

ஒரு பெற்றோராக தனது பிள்ளைகளுக்கு உணவு,உடை,இருப்பிடம் கல்வி மட்டும் அளிப்பது கடமையல்ல.பாதுகாப்பான பழக்க வழக்கங்களை சொல்லித்தரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பர்தா போபியா.இதனை அழகுற செதுக்கியவர் சகோதரி ஹுசைனம்மா.

அடுத்து இரவுவானம் சுரேஷ். திருப்பூர்காரர். எப்போதாவது பதிவிடுவார். ஆனாலும் இவரின் பதிவு பேசப்படும். அதில் ஒன்றினைப் பார்ப்போம்.இவரின் நாய்கள் V/S மனிதர்கள் பதிவினை வாசித்து பாருங்களேன்.நண்பர் தொடர்ந்து எழுத அவரது சூழ்நிலைகள் ஓத்துழைக்கட்டும்.

நா. மணிவண்ணன். மதுரைக்காரர்.மதுரை வட்டார வழக்கில் இவர் எழுதுவது சுவாரஸ்யமாக இருக்கும். இவரது பதிவுகளில் மிகவும் கவர்ந்தது அத்த மக ரத்தினமே.நீங்களும் வாசித்துவிட்டு வரலாமே.இப்போது எழுதுவதை வெகுவாக குறைத்து கொண்டது எல்லோருக்கும் வருத்தமே. 

அடுத்தது சேலம் தேவா.இவரது தளம் தேவாவின் தேடுதல்கள்.சர்க்கஸ்.இவரது பதிவு ஒன்று சர்க்கஸ் அனுபவம்.குழந்தை பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுபடுத்துக்கிறது 

அடுத்தது சுடச்சுட அரசியல் பதிவுகளை எழுதும் ரஹீம்கஸாலி. அவரது பதிவுகளில் தொலைபேசி நிறுவனத்தால் அவருக்கு நேர்ந்த கதி பற்றி எடுத்துச்சொல்லி அதற்க்கு தீர்வு காண்கிறார்.இந்த கதி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

அடுத்தது நண்பர் ரெவரி இவரின் வலை மெல்லத்தமிழ் இனி வாழும்.இவருடைய படம் வரைந்து பாகம் குறி தொடர் பிரபலமானவைகளில் ஒன்று.அவரின் புத்தாண்டுத் தீர்மானங்களையும் அதனை அவர் கடைபித்தவிதமும் நம் சார்பாக பதிவிட்ட மாதிரிதான் எனக்குத்தெரிகிறது.

அடுத்தது நண்பர் ஆரூர் முனா செந்தில்.இவர் தோத்தவண்டா என்ற பெயரில் வலை நடத்தி வருகிறார்.சொந்த ஊரின் சுவாரசியத்தினை அழகுற பகிர்ந்துவைத்துள்ளார். நாமும் சென்று பார்த்துவிட்டு வரலாமா..

அடுத்தது நண்பர் கோகுல்மனதில் கோகுல் சமுதாயத்தில் தினம் தினம் காணும் விஷயங்களை கருவாக கொண்டு மனதில் பட்டதை விழிப்புணர்வு பதிவாக வெளியிடுவதில் கெட்டிக்காரர்.தற்சமயம் தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாதிக்கப்பட்ட போது வலையுலக நிதி திரட்டி முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியவர்.இவரின் பதிவு ஒன்று இங்கே குடிகாரன் பேச்சு விடிஞ்சா...?

அடுத்து நண்பர் ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.



பதிவர் அறிமுகம் :

இன்றைய அறிமுகப்பதிவர் திரு S.S பூங்கதிர் அவர்கள்.இவர் பூங்கதிர் போர்ட்டூன்ஸ் என்ற பெயரில் தற்போது வலை நடத்தி வருகிறார்.பிரபல இதழ் பாக்யாவில் எதிரொலி என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது ஊர் திருவிழா பற்றிய கவிதை ஒன்றினை காணலாமே.

அடுத்த அறிமுகப்பதிவர் திரு ராஜ் அவர்கள்.இவர் அரசியல் ஆர்வமுள்ள, சமூக அக்கறை உள்ள,சினிமாவை விரும்பும் ஒரு சராசரி வாலிபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றார்.ஹோலிவுட்ராஜ் என்ற பெயரில் வலையில் இருந்தாலும் விமர்சனம் செய்வது ஹாலிவுட் படங்களே.

அடுத்த அறிமுகப்பதிவர் திருமதி மு.சரளாதேவி அவர்கள்.பெண் என்னும் புதுமை என்ற பெயரில் வலைத்தளம் நடத்திவருகிறார்.கடந்த ஜனவரி முதல் கவிதைகளை எழுதி வருகிறார்.இவரது பதிவில் பெண் என்னும் இலக்கியம் வாசிக்கலாமே. 


நன்றி நண்பர்களே ! நீங்கள் தொடர்ந்து வளமோடும் நலமோடும் எழுத வலைச்சரத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.

மீண்டுமொரு பதிவில் புதிய அறிமுகங்களுடனும் மனதை கவர்ந்த பதிவுகளுடனும் உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


78 comments:

  1. ராஜ், கோவை சரளா இருவர் மட்டுமே புதியவர்கள்... மற்ற அனைவருமே ஏற்கனவே நம் நண்பர்கள்தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. புதியவர்கள் சிலரைத் தெரிந்து கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி.ரெவெரி,கோகுல் ,சென்னைப்பித்தன் நன்கு அறிமுகமான நண்பர்கள்.தொடருங்கள் சிறப்பாக சம்பத்.

    ReplyDelete
  3. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ. சில புதியவர்களை கண்டு கொண்டேன். நன்றி ச்கோ

    ReplyDelete
  4. புதிய அறிமுகங்கள் சிலவும், பழகியவர்கள் சிலருமாக இந்த வலைச்சரத் தொகுப்பு சுவாரஸ்யம். நல்ல ஆரம்பம். தொடருங்கள்... அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவரும்.
    முத்து முத்தான பதிவர்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துகள். நல்லதொரு சேவைக்கு நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  8. வலைச்சரதில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ..
    புதியவர்களை ஊக்குவித்து அவர்களை வளர செய்வதில் வலைச்சரத்தில் பங்கு மகத்தானது. கிட்ட தட்ட முன்று வருடங்களுக்கு மேல் சைல்ன்ட் (Silent) வலைப்பூ வாசகன் ஆக இருந்து இபொழுது தான் நானே ஒரு வலைப்பூ ஆரம்பித்து உள்ளேன்...
    எங்கள் மாதிரி புதியவர்களுக்கு இந்த மாதிரி அறிமுகங்கள் நல்ல உற்சாகத்தை குடுக்கும்... மிக்க நன்றி....
    தொடருட்டும் உங்கள் பனி....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நல்ல பதிவுகளின் தொகுப்பு.என் பதிவையும் இணைத்ததற்கு மகிழ்ச்சி..!!

    ReplyDelete
  11. என்னையும் மறக்காம அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ சம்பத்.

    பதிவர் அறிமுகத்தில் வந்த மூவரும் புதியவர்கள் மற்றவர்களை தெரியும்.

    நல்லதொரு பகிர்வு. உழைப்பு தெரிகிறது.

    வாழ்த்துகள்

    முடிந்தவரை தொடர்கிறேன் :-)

    ReplyDelete
  12. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி சம்பத். அது மட்டுமில்லாமல் கலக்கலாக எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தங்கள் சேவை மனப்பான்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... தாயுள்ளத்தோடு என்னை அறிமுகப்படுத்தி அரவணைத்துக் கொண்ட உங்கள் தூய உள்ளத்திற்கு என்றென்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன்....

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..

    சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்..! நன்றி சம்பத் குமார் அவர்களே..!!!

    அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  16. அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ராஜ், சரளா அறிமுகத்திற்கு நன்றி சம்பத். வெற்றிகரமாக தொடரட்டும் வலைச்சர பயணம்!!

    ReplyDelete
  18. என்னையும் உங்கள் சரத்தில் தொடுத்ததற்கு மிக்க நன்றி.கொஞ்சம் பயமாக இருக்கிறது சம்பத்குமார்,இந்த நல்ல பேரைக் காப்பாற்றும் விதமாகத் தொடர்ந்து எழுத வேண்டுமே என்று!
    புதிய அறிமுகங்கள் அருமை.அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. பதிவர்கள் அறிமுகம் சிறபாக உள்ளது!
    மூத்தவர் முன்பும் புதியவர் பின்பும்
    சொல்லிய விதம் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. @ Philosophy Prabhakaran said...

    //ராஜ், கோவை சரளா இருவர் மட்டுமே புதியவர்கள்... மற்ற அனைவருமே ஏற்கனவே நம் நண்பர்கள்தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரபாகர்

    ReplyDelete
  22. @ தனிமரம் said...
    //புதியவர்கள் சிலரைத் தெரிந்து கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி.ரெவெரி,கோகுல் ,சென்னைப்பித்தன் நன்கு அறிமுகமான நண்பர்கள்.தொடருங்கள் சிறப்பாக சம்பத்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  23. @ ராஜி said...
    //அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ. சில புதியவர்களை கண்டு கொண்டேன். நன்றி ச்கோ//

    வணக்கம் அக்கா

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  24. @ கணேஷ் said...
    //புதிய அறிமுகங்கள் சிலவும், பழகியவர்கள் சிலருமாக இந்த வலைச்சரத் தொகுப்பு சுவாரஸ்யம். நல்ல ஆரம்பம். தொடருங்கள்... அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  25. @விக்கியுலகம் said...

    //வாழ்த்துக்கள் மாப்ள!//

    மிக்க நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  26. அறிமுகங்கள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. @ சி.பி.செந்தில்குமார் said...

    //வாழ்த்துகள் //

    மிக்க நன்றி சிபி அண்ணா

    ReplyDelete
  28. http://www.etakkumatakku.com/2012/02/blog-post_22.html

    கபி.பந்தல்குமார்-ன் கில்மா வெறியாட்டம் !!!

    ReplyDelete
  29. எனது அறிமுகத்திற்கும் மிகவும் நன்றி சம்பத் குமார்.

    பின்னூட்டங்கள் எழுதுவதில்லையென்றாலும், வலைச்சரத்தை வழக்கமாகப் பார்வையிடத் தவறுவதில்லை.

    ReplyDelete
  30. நல்ல தொகுப்பு சம்பத்....

    தொடருங்கள்....


    வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

    ReplyDelete
  31. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  33. "மனம் கவர்ந்த பதிவுகள்"

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  34. அருமையான தேடல்.

    ReplyDelete
  35. @ மகேந்திரன் said...
    //இன்றைய அறிமுகங்கள் அனைவரும்.
    முத்து முத்தான பதிவர்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  36. @ நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

    //அனைவருக்கும் வாழ்த்துகள். நல்லதொரு சேவைக்கு நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி.//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  37. @ ராஜ் said...

    //வலைச்சரதில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ..
    புதியவர்களை ஊக்குவித்து அவர்களை வளர செய்வதில் வலைச்சரத்தில் பங்கு மகத்தானது. ... //

    வணக்கம் சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. @சேலம் தேவா said...
    //நல்ல பதிவுகளின் தொகுப்பு.என் பதிவையும் இணைத்ததற்கு மகிழ்ச்சி..!!//

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  39. @ ஆமினா said...

    //என்னையும் மறக்காம அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ சம்பத்.

    பதிவர் அறிமுகத்தில் வந்த மூவரும் புதியவர்கள் மற்றவர்களை தெரியும்.

    நல்லதொரு பகிர்வு. உழைப்பு தெரிகிறது.

    வாழ்த்துகள்

    முடிந்தவரை தொடர்கிறேன் :-)//

    வணக்கம் சகோ..

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  40. @Abdul Basith said...
    //அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.//

    வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  41. @ஆரூர் மூனா செந்தில் said...
    //மிக்க நன்றி சம்பத். அது மட்டுமில்லாமல் கலக்கலாக எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்//

    தொடரட்டும் உங்கள் பயணங்கள் செந்தில்

    ReplyDelete
  42. @எஸ்.எஸ்.பூங்கதிர் said...

    //தங்கள் சேவை மனப்பான்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... தாயுள்ளத்தோடு என்னை அறிமுகப்படுத்தி அரவணைத்துக் கொண்ட உங்கள் தூய உள்ளத்திற்கு என்றென்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன்....//

    வணக்கம் சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. @தங்கம் பழனி said...
    //வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..

    சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்..! நன்றி சம்பத் குமார் அவர்களே..!!!

    அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..!!//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  44. @Lakshmi said...

    //அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி அம்மா

    ReplyDelete
  45. @சிவகுமார் ! said...
    //ராஜ், சரளா அறிமுகத்திற்கு நன்றி சம்பத். வெற்றிகரமாக தொடரட்டும் வலைச்சர பயணம்!!//

    மிக்க நன்றி சிவா

    ReplyDelete
  46. @சென்னை பித்தன் said...
    //என்னையும் உங்கள் சரத்தில் தொடுத்ததற்கு மிக்க நன்றி.கொஞ்சம் பயமாக இருக்கிறது சம்பத்குமார்,இந்த நல்ல பேரைக் காப்பாற்றும் விதமாகத் தொடர்ந்து எழுத வேண்டுமே என்று!
    புதிய அறிமுகங்கள் அருமை.அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஐயா

    தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete
  47. @ புலவர் சா இராமாநுசம் said...

    //பதிவர்கள் அறிமுகம் சிறபாக உள்ளது!
    மூத்தவர் முன்பும் புதியவர் பின்பும்
    சொல்லிய விதம் அருமை!

    சா இராமாநுசம்//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  48. @Prabu Krishna said...

    //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  49. @irfan zarook said...

    //அறிமுகங்கள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  50. @ஹுஸைனம்மா said...

    //எனது அறிமுகத்திற்கும் மிகவும் நன்றி சம்பத் குமார்.

    பின்னூட்டங்கள் எழுதுவதில்லையென்றாலும், வலைச்சரத்தை வழக்கமாகப் பார்வையிடத் தவறுவதில்லை.//

    வணக்கம் சகோதரி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  51. @தமிழ்வாசி பிரகாஷ் said...

    //நல்ல தொகுப்பு சம்பத்....
    தொடருங்கள்....
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்!//

    நன்றி பிரகாஷ்

    ReplyDelete
  52. @guna thamizh said...

    //நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி முனைவர் அவர்களே

    ReplyDelete
  53. @DhanaSekaran .S said...

    //அருமைப்பதிவு வாழ்த்துகள்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  54. @துரைடேனியல் said...

    //Arumaiyana Arimugankal. Vaalthukkal.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  55. @இராஜராஜேஸ்வரி said...

    //"மனம் கவர்ந்த பதிவுகள்"

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  56. @விச்சு said...

    //அருமையான தேடல்.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  57. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  58. அருமையான அறிமுகங்கள் .

    ReplyDelete
  59. நல்ல அறிமுகங்கள்! நன்றி சம்பத்!

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள் சம்பத் ஆசிரியப்பணி ஏற்றமைக்கு...

    நன்றி...என் வலை அறிமுகத்துக்கு...

    பாராட்டுகள் சிறப்பான பணிக்கு...

    அறிமுகமான என் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  61. தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்...

    சில புதியவர்களின் அறிமுகம் கிடைத்தது...

    அறிமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  62. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  63. @ரஹீம் கஸாலி said...

    //அறிமுகத்திற்கு நன்றி நண்பரே....//

    தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete
  64. @சசிகலா said...

    //அருமையான அறிமுகங்கள் .//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  65. @வீடு K.S.சுரேஸ்குமார் said...

    //நல்ல அறிமுகங்கள்! நன்றி சம்பத்!//

    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  66. @ரெவெரி said...

    //வாழ்த்துக்கள் சம்பத் ஆசிரியப்பணி ஏற்றமைக்கு...

    நன்றி...என் வலை அறிமுகத்துக்கு...

    பாராட்டுகள் சிறப்பான பணிக்கு...

    அறிமுகமான என் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி நண்பரே

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  67. @ராஜா MVS said...
    //தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்...

    சில புதியவர்களின் அறிமுகம் கிடைத்தது...

    அறிமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்...//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  68. @சே.குமார் said...

    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  69. சகோதரர் சம்பத் குமாருக்கு முதலில் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்
    என்னுடைய வலைதளத்தை தமிழ் ஆர்வலர்களுக்கு அறிமுகபடுதியதர்க்கும் மேற்குறிப்பிட்ட பாசமிகு உறவுகள் அனைவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி
    மேலும் என் வலைதளத்திற்கு வருகை தந்து உங்களின் உள்ளார்ந்த உணர்வுகளை உணர்ந்து செல்லுங்கள்.

    வளசரதிர்க்கு எப்போதும் கடமை பட்டவள் நான்

    ReplyDelete
  70. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  71. சகோதரர் சம்பத் அவர்களுக்கு மிக்க பல பெரிய மூத்த பதிவர்கள் மத்தியில் இந்த சிறியவனையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! நன்றி! நன்றி!

    மற்ற பதிவர்களும் அறிமுகம் ஆனவர்கள் தான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. வணக்கம் நண்பரே!எனது அறிமுகத்திற்கும் என்னைப்பற்றிய பார்வைக்கும் நன்றி.சிறப்புற பணியாற்றுகிறீர்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  73. @Jaleela Kamal said...

    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  74. @ஹைதர் அலி said...

    //சகோதரர் சம்பத் அவர்களுக்கு மிக்க பல பெரிய மூத்த பதிவர்கள் மத்தியில் இந்த சிறியவனையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! நன்றி! நன்றி!

    மற்ற பதிவர்களும் அறிமுகம் ஆனவர்கள் தான் வாழ்த்துக்கள்//

    வணக்கம் அண்ணா

    தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணங்கள்

    ReplyDelete
  75. @ கோகுல் said...

    //வணக்கம் நண்பரே!எனது அறிமுகத்திற்கும் என்னைப்பற்றிய பார்வைக்கும் நன்றி.சிறப்புற பணியாற்றுகிறீர்கள்.வாழ்த்துகள்.//

    வணக்கம் கோகுல்

    வாழ்த்திற்க்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  76. மனம் கவர்ந்த பதிவுகள் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  77. @kavithai (kovaikkavi) said...

    //மனம் கவர்ந்த பதிவுகள் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது